வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோபைடன், வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன்னை முன்நிபந்தனையின்றி சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்கிர்பே கூறியது, ஆசியாவில் சீன ஆதிக்கம், பசிபிக் தீவுகளுடனான உறவு, மற்றும் வட கொரியாவின் அணு ஆயுத தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிபர் ஜோபைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷாடா, தென்கொரிய அதிபர் யூன்சுக் யியோல் ஆகியோருடன் முத்தரப்பு சந்திப்பு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.
![]() |
இதற்கு பின் வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன்னுடன் எந்த வித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.இதற்கு முன் முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் , வடகொரிய அதிபரை பல முறை சந்தித்து பேசியுள்ளார். அது தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. ஆனாலும் இம்முறை வட கொரியா அதிபருடனான சந்திப்பில் அணு ஆயுத தயாரிப்பை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையே முக்கிய இடம் பெறும் இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமெரிக்க அதிபருடனான சந்திப்புக்கு வட கொரியா தரப்பிலிருந்து சம்மதம் தெரிவித்து விட்டதாக வட கொரியா மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பைடன், கிம்ஜோங் சந்தித்து பேசலாம் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement