இந்தியாவின் விண்வெளி ஆய்வில் மாபெரும் பாய்ச்சல்… ஸ்டாலின் வாழ்த்து!

சந்திரயான் 3 இன்று வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதனை ஜோஹன்னஸ்பெர்க்கில் காணொலி மூலம் கண்டு ரசித்த பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். விண்வெளிக்கும் நிலவுக்கும் மனிதனை அனுப்பவதே அடுத்த இலக்கு என்று கூறினார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை போனில் தொடர்பு கொண்டும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். விரைவில் பெங்களூரு வந்து அனைத்து விஞ்ஞானிகளையும் நேரில் சந்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியது! சந்திரனின் மேற்பரப்பைக் கைப்பற்றிய நான்காவது நாடாக இந்தியாவை நிறுத்தும் ஒரு மகத்தான சாதனை என்று குறிப்பிட்டுள்ளார். அயராத முயற்சிகளை மேற்கொண்ட ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள் என்றும் இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.