ஆசிய கோப்பையை சிராஜிடம் கொடுக்காமல் திலக் வர்மாவிடம் ரோகித் கொடுத்தது ஏன்?

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இந்தியாவின் வெற்றிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் முகமது சிராஜ். இந்தப் போட்டியில் சிர்ஜா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை எளிதாக்கினார். ஆனால் ஆசிய கோப்பை கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சிராஜிடம் அவர் கோப்பையை கொடுக்கவில்லை. மாறாக, திலக் வர்மாவிடம் கொடுத்தார் ரோகித் சர்மா. ரோஹித் ஏன் இப்படி செய்தார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உண்மையில் என்ன நடந்தது தெரியுமா?

போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது அதன் பிறகு பரிசு விநியோகம் தொடங்கியது. முதலில் சிறந்த கேட்சுக்காக ரவீந்திர ஜடேஜாவுக்கு விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சிறந்த செயல்பாட்டிற்கான விருது பெற்றார். அதன்பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா அழைக்கப்பட்டார். இந்தப் போட்டி குறித்து ரோஹித்திடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது, அதற்கு ரோஹித்தும் பதிலளித்தார். பின்னர் இந்த போட்டியின் கோப்பை ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. ரோஹித் கோப்பையை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். பின்னர் ரோஹித் அந்த கோப்பையை திலக் வர்மாவிடம் ஒப்படைத்தார்.

திலக் வர்மா கையில் கோப்பை

அணியினரிடம் கோப்பையை கொடுக்கும்போது அந்த இடத்தில் இளம் வீரரான திலக் வர்மா தான் முதலில் இருந்தார். மேலும், ஒரு இளம் வீரராக இப்போது தான் இந்திய அணியில் இடம்பிடித்திருப்பதால் அவரை ஊக்குவிக்கும் வகையில் கேப்டன் ரோகித் சர்மா இப்படி செய்திருக்கிறார். பொதுவாகவே கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார். அதனுடைய வெளிப்பாடு தான் இதுவும்.  இதற்காக ரோகித்தை பலரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.