Protests near Uttarkashi tunnel site | சுரங்க பாதையில் சிக்கிய 40 பேர்; 4 நாட்களாக தொடரும் போராட்டம்; ஆவேசமுற்ற மக்கள்

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்க விபத்தில் சிக்கிய 40 பேரை மீட்கும் பணி 4 நாட்களாக தொடர்ந்து வந்தாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் தொழிலாளர்களின் உறவினர்கள் விபத்து நடந்த இடத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா- தண்டல்கான் இடையில் சுரங்கபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பிரம்மக்கல்- யமுனோரி தேசிய நெடுஞ்சாலையில் இந்த பாதை உள்ளது. இந்த கட்டுமான பணியில் பலர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்டது. 40 பேர் சிக்கியுள்ளனர். மாவட்ட உயர் அதிகாரிகள் , தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.