புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் மற்றும் விராலிமலை ஆகிய பகுதிகளில் உள்ள திமுகவைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா காலாடி பட்டியில் நடைபெற்றது. திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த நிர்வாகிகளுக்கு விஜயபாஸ்கர் பொன்னாடை போர்த்தி வரவேற்று அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், திமுக மீது மக்கள் மத்தியில் அவர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டு விட்டது.
