''மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணம்'': குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர்

புதுடெல்லி: மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்றும் நமது நாட்டைப் போல உலகின் எந்தப் பகுதியும் மனித உரிமைகளால் மலர்ந்து, செழிப்பாக இல்லை என்றும் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் தின விழா புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், சிறப்புரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், “நமது டி.என்.ஏ.வில் உள்ள மனித உரிமைகளை மதிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும் நமது ஆழ்ந்த அர்ப்பணிப்பை நமது நாகரிக நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு அர்ப்பணிப்பு பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டார். மனித உரிமைகளை வளர்ப்பதிலும், ஊக்குவிப்பதிலும், வளப்படுத்துவதிலும் இந்தியா உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மனித உரிமைகளை வளர்ப்பதை ‘ஜனநாயகத்திற்கான அடித்தளம்’ என்று அழைத்த குடியரசுத் துணைத்தலைவர், “சட்டத்தின் முன் சமத்துவம் என்பது மனித உரிமையை ஊக்குவிப்பதில் பிரிக்க முடியாத ஒரு அம்சமாகும்” என்று வலியுறுத்தினார்.

மனித உரிமைகளை வளர்ப்பதற்காக மாநிலத்தின் மூன்று அங்கங்களான சட்டமன்றம், நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை அவர் பாராட்டினார். ஏனெனில் “மனித உரிமைகளுக்கான மரியாதை நமது நாகரிக நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பில் பொதிந்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

இலவசங்களின் அரசியலில் சமீபத்திய எழுச்சி குறித்து பேசிய குடியரசுத் துணைத்தலைவர், இது செலவின முன்னுரிமையை சிதைக்க வழிவகுக்கும் என்றும், “நிதி மானியங்கள் மூலம் பாக்கெட்டை வலுப்படுத்துவது சார்புநிலையை மட்டுமே அதிகரிக்கிறது” என்பதால் பெரும் பொருளாதார நிலைத்தன்மையின் அடிப்படை கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்றும் எச்சரித்தார். சில உலகளாவிய நிறுவனங்களால் இந்தியா நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டிய குடியரசுத் துணைத்தலைவர், மனித உரிமைகள் குறித்த நாட்டின் செயல்திறனை ஆழமாக ஆராயுமாறும், மேற்பரப்பை கீற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஊழல், பாரபட்சம், சுயநலம் இல்லாத இந்தியாவின் நிர்வாக மாதிரியை இதுபோன்ற நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். இது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தகுதி ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பான நிர்வாகம் ஒரு மாற்றம் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், சேவை வழங்கலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் இந்த முன்னேற்றத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

ஒடுக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு எரிவாயு இணைப்புகளை வழங்குவது ஒரு “மாற்றகரமான புரட்சி” என்று குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார், இது நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கண்களில் வடியும் கண்ணீருக்கு நிவாரணம் அளித்தது. பெரிய உள்கட்டமைப்பு வளர்ச்சி “மனித உரிமைகளின் பெருக்கம் மற்றும் அதிகாரமளித்தலுக்கு” இன்றியமையாதது என்றும் அவர் பாராட்டினார்.

மனித உரிமைகளின் முன்னேற்றத்தில், மனிதகுலத்தின் ஆறில் ஒரு பங்கு தாயகமான இந்தியாவில் ஏற்பட்டு வரும் உறுதியான மாற்றங்களை குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் எடுத்துரைத்தார். “நமது நாட்டைப் போல உலகின் எந்தப் பகுதியும் மனித உரிமைகளால் மலர்ந்து, செழிப்பாக இல்லை” என்று அவர் குறிப்பிட்டார். “மனித உரிமைகள் மற்றும் விழுமியங்கள் மலர்ந்ததன் காரணமாக நமது அமிர்த காலம் நமது கௌரவ காலமாக மாறியுள்ளது” என்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.