நீலகிரி: சுருக்கு வைத்து சிறுத்தையைக் கொன்று கால்கள் வெட்டப்பட்ட கொடூரம் – நகங்களுக்காக வேட்டையா?

நாட்டின் முதல் பல்லுயிர்ச்சூழல் மண்டலமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது நீலகிரி. அழிவின் விளிம்பில் தவிக்கும் பல்வேறு வகையான உயிரினங்களின் கடைசிப் புகலிடமாகவும் நீலகிரி வனப்பகுதி இருந்து வருகிறது. ஆனால், சமீப காலமாக வனவிலங்கு வேட்டைத் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஊட்டி அருகில் உள்ள சின்னக்குன்னூர் பகுதியில் சில மாதங்களுக்கு முன் தாயை இழந்த 4 புலிக்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன. ஆனால், தாய் புலியின் நிலை என்ன ஆனது என்று இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது. இதேபோல் காட்டேரி அணை பகுதியில் காட்டுமாடு ஒன்று நெற்றியில் துப்பாக்கித் தோட்டா பயந்த நிலையில் சடலமாகக் கிடந்தது.

சுட்டுக்கொல்லப்பட்ட காட்டுமாடு

இந்த நிலையில், கோத்தகிரி மேல்தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் பணியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். சிறுத்தை இறநந்து கிடப்பதை உறுதி செய்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுத்தை சுருக்கு வைத்து கொல்லப்பட்டிருப்பதும் அதன் 3 கால் பகுதிகள் வெட்டப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர், சிறுத்தை கொல்லப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள், ” கோத்தகிரி வனச்சரகம், மேல்தட்டபள்ளம் என்ற தனியார் தேயிலைத் தோட்ட பகுதியில் சிறுத்தை ஒன்று சுருக்கு கம்பியில் சிக்கி இறந்திருக்கிறது. கோத்தகிரி வனச்சரக அலுவலர் நேரில் சென்று தணிக்கை செய்ததில் இறந்தது ஆண் சிறுத்தை என்றும், மூன்று கால்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சிறுத்தையின் கோரைப் பற்கள் அப்படியே உள்ளது. மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்து, கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி சரகர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரப்படுகிறது ” என தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுத்தை

சிறுத்தை கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ” சமீப நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்கு வேட்டை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. சிறுத்தைகளின் நகங்களுக்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. நகங்களுக்காகவே இந்த கொடூர செயலை செய்திருக்கலாம். வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.