4 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலத்தை இறந்து போன மகளின் நினைவாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிக்கு தானமாக வழங்கிய தாய் குறித்த செய்தி வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேலூர் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம் இவரது மகள் ஜனனி (30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இறக்கும் தருவாயில் தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு தனது தாயிடம் […]
