சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அதற்கான தேதிகளையும் வெளியிட்டு உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி, அதை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வரும் நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளனர். அதன்படி,ஜன.22 […]
