DGCA slaps Rs 1.10 crore penalty on Air India for safety violations | பாதுகாப்பு விதிமீறல்: ஏர் இந்தியாவுக்கு ரூ.1 கோடி அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: நீண்ட தூரம் இயக்கப்படும் சில விமானங்களில் பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்(டிஜிசிஏ) ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது.

இது தொடர்பாக, விமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக அளித்த புகார் குறித்து டிஜிசிஏ விரிவான விசாரணையை நடத்தியது. அப்போது, புகாரில் முகாந்திரம் உள்ளதால், ஏர் இந்தியாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடர்பாக டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: குத்தகைக்கு எடுக்கப்பட்ட வீடியோக்கள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லை. இதனால், ஏர் இந்தியாவுக்கு ரூ1.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.