டைரி பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் விக்ராந்த்

கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விக்ராந்த். ஆரம்ப காலத்தில் இவர் நடித்து வெளிவந்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதன் பிறகு கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு உள்ளிட்ட சில படங்கள் விக்ராந்த்க்கு நல்ல படமாக அமைந்தது. ஆனால், இதற்கு பிறகும் விக்ராந்த்க்கு அடுத்து கட்டத்திற்கு நகர்வதற்கான படங்கள் அமையவில்லை. இந்த நிலையில் தற்போது ரஜினியுடன் இணைந்து 'லால் சலாம்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

லால் சலாம் படத்தை தொடர்ந்து டைரி பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் விக்ராந்த் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் வேலை இன்னாசி பாண்டியன் இப்போது இயக்கி வரும் 'புல்லட்' படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு துவங்கும் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.