விவசாயிகள் திட்டமிட்டிருக்கும் ‘டெல்லி சலோ’ பேரணியை முன்னிட்டு, பிப்ரவரி 13ம் தேதி வரை பல மாவட்டங்களில் மொபைல் இன்டர்நெட், மொத்தமாக அனுப்பப்படும் எஸ்எம்எஸ் (பல்க் எஸ்எம்எஸ்), டாங்கிள் சேவைகள் ஆகியவை நிறுத்தப்படுவதாக முதல்வர் மனோகர் லால் கட்டர் தலைமையிலான ஹரியானா அரசாங்கம் அறிவித்துள்ளது.
