ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் திடீரென தீக்குளித்த நபர் – போலீஸ் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். யாரும் எதிர்பாராத சமயத்தில் நடந்த இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகமே பெரும் பரபரப்புக்குள்ளானது. அந்தசமயத்தில் சுதாரித்துக்கொண்ட அக்கம்பக்கத்தினர் தீக்குளித்த நபரின் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை காப்பாற்றினர். உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரிடம், நீதிபதி திருநாவுக்கரசு விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தார்.

சந்திரசேகர்

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீக்குளித்த நபர் யார்? இந்த சம்பவத்துக்கான பின்னணி என்ன என்பது தொடர்பாக போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு அருகே எம்.கே.டிநகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 45). இவர் மீது விருதுநகர் மேற்கு காவல்நிலையம், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர், கோவில்பட்டி காவல் நிலையங்களில் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், சந்திரசேகரின் வீட்டில் சொத்து பிரச்னையும் நடந்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதவிர அவரின் மனைவி, பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

காவல் நிலையம்

இந்தநிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டிற்கு வந்த சந்திரசேகர், தான் சார்ந்த வழக்கு பிரச்னைகளுக்காக தீக்குளித்தாரா?, குடும்ப பிரச்னையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெளிவாக தெரியவில்லை. தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சந்திரசேகர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்படும்” என்றனர்‌.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.