ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்!

மலையாள நடிகர் பஹத் பாசில் மலையாள மொழி படங்களில் கதாநாயகனாக நடிப்பதுடன், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது இயக்குனர் எஸ். எஸ். ராஜமவுலி மகன் எஸ்.எஸ். கார்த்திகேயா தனது ஆர்கா மீடியாஸ் நிறுவனத்தின் மூலம் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கிறார். முதல் படமாக அறிமுக இயக்குனர் ஷாசாங் எல்டி இயக்கத்தில் 'டோன்ட் டிரபுள் தி டிரபுள்' என்கிற படத்தில் பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இதன் படப்பிடிப்பு இவ்வருட ஜூன் மாதத்தில் தொடங்குகிறது; 2025ம் ஆண்டில் இப்படம் திரைக்கு வருகிறது.

மற்றொரு படத்தை அறிமுக இயக்குனர் சித்தார்த்தா நடிலா இயக்கும் 'ஆக்சிசன்' என்கிற படத்திலும் கதாநாயகனாக பஹத் பாசில் நடிக்கிறார். தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இதன் படப்பிடிப்பு இவ்வருடத்தில் தொடங்குகிறது. இந்த இரண்டு படங்களையும் ராஜமவுலி வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.