ஐ.பி.எல்; சஞ்சு சாம்சன் அரைசதம் – ராஜஸ்தான் 193 ரன்கள் குவிப்பு

ஜெய்ப்பூர்,

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, மாலை 3.30 மணிக்கு தொடங்கி ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களம் இறங்கினர். இதில் பட்லர் 11 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சாம்சன் 33 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக் 43 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய ஹெட்மையர் 5 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து துருவ் ஜூரெல் களம் புகுந்தார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் சாம்சன் 82 ரன்கள் எடுத்தார். லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி ஆட உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.