பாஜக தொண்டர்களின் ஆற்றலும் உற்சாகமும் என்னை ஊக்கமளிக்க செய்கின்றன – பிரதமர் மோடி

புதுடெல்லி,

1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பாரதிய ஜனதா கட்சி துவக்கப்பட்டது. ஆண்டுதோறும் அதே நாளில் கட்சி துவக்க விழாவை பாஜக தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் பாஜக தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பாஜகவின் தொண்டர்களுக்கு வாழ்த்துகள். கடந்த பல தசாப்தங்களாக நமது கட்சியை வலுப்படுத்த தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அனைவரையும் நாங்கள் நினைவு கூர்கிறோம். இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ந்த பாரதத்தின் கனவை நனவாக்கவும் நமது இணையற்ற உறுதிப்பாட்டை இந்த முக்கியமான நாள் மீண்டும் வலியுறுத்துகிறது.

இந்திய மக்கள் நமது கட்சியின் நல்லாட்சியை பார்க்கிறார்கள், இது கடந்த ஆண்டுகளில் நாம் பெற்ற வரலாற்று தீர்ப்புகளிலும் பிரதிபலிக்கிறது. அது மக்களவை தேர்தல்கள், பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு உள்ளாட்சித் தேர்தல்கள் என எதுவாக இருந்தாலும் சரி. நமது அரசு தொடர்ந்து சமூகத்திற்கு சேவை செய்து, அனைத்து வகையான வளர்ச்சியையும் உறுதி செய்யும்.

நமது கட்சியின் முதுகெலும்பான நமது கடின உழைப்பாளிகளான தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகள், அவர்கள் களத்தில் தீவிரமாகச் செயல்படுகின்றனர். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 24 மணி நேரமும் பணியாற்றி, ஏழைகள், தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் விதத்தில் நான் பெருமைப்படுகிறேன். அவர்களின் ஆற்றலும் உற்சாகமும் உண்மையிலேயே என்னை ஊக்கமளிக்க செய்கின்றன

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.