திருப்பூர்: தலை நசுக்கப்பட்டு இளம்பெண் படுகொலை; தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் குடியிருப்பில் உள்ள காலி இடத்தில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அத்தகவலின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த பெண்ணின் தலை மற்றும் கைகளில் கற்களால் அடித்து நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பெண்ணைக் கொலை செய்யப் பயன்படுத்திய கல் உள்ளிட்டவற்றில் பதிவான கைரேகைகளைத் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சேகரித்தனர்.

உடனடியாக உயிரிழந்த பெண்ணின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர் போலீஸ்
திருப்பூர் போலீஸ்

திருப்பூர் மாநகர துணை காவல் ஆணையர் தீபா சத்யன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மோப்பநாய் ஹண்டர் உதவியுடன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

மோப்ப நாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள பேருந்து நிலையம் வரை ஓடிச் சென்று நின்றது. உயிரிழந்த பெண் தனியார் மருத்துவமனை செவிலியர் உடை அணிந்திருந்ததால் அவர் செவிலியரா அல்லது பூம்புகார் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவரா என போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் பல்லடம் சாலை வித்யாலயம் பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் செவிலியராக அவர் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா என்பதும் இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தை உள்ளதும் தெரியவந்தது.

மேலும் இவர் திருப்பூருக்குக் கடந்த 20 நாட்களுக்கு முன்பாகத்தான் வந்துள்ளார். பணிக்குச் சேர்ந்தும் 20 நாட்கள் மட்டுமே ஆவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் 11 ஆண்டுகளுக்கு முன்னர் சித்ரா வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்பவரைக் காதல் திருமணம் செய்துள்ளார்.

உசிலம்பட்டி அருகே வாடிப்பட்டி பகுதியில் தங்கி இருந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, தனது 2 குழந்தைகள் மற்றும் தாய் உடன் திருப்பூர் தமிழ்நாடு தியேட்டர் பின்புறம் வீடு வாடகைக்கு எடுத்து அருகில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் செவிலியராக சித்ரா பணியாற்றி வந்துள்ளார்.

திருப்பூரில் கொலை
திருப்பூரில் கொலை

இந்நிலையில் மனைவியை அழைத்துச் செல்ல கணவர் ராஜேஷ் கண்ணா நேற்று திருப்பூரில் சித்ரா பணியாற்றி வரும் மருத்துவமனை மற்றும் வீட்டிற்கு வந்த நிலையில் தற்போது சித்ரா சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் கணவர் ராஜேஷ் கண்ணாவைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே பெண் கொலை தலை நசுக்கப்பட்டு கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.