பதிவுத்துறை வரலாற்றில் ஒரே நாளில் ரூ.272 கோடி வசூல்: அமைச்சர் மூர்த்தி தகவல்

பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏப்.30-ம் தேதி ஒரே நாளில் ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மங்களகரமான நாளான ஏப்.30-ம் தேதி புதன்கிழமை அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அதை ஏற்று, கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்பட்டன.

கடந்த பிப். 10-ம் தேதி ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, அதுவரையில் இல்லாத அளவுக்கு அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இந்த 2025-26 நிதியாண்டில் ஒரேநாளில் அதைவிட அதிகமாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று முன்தினம் ஏப்.30-ம் தேதி ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை இல்லாத அளவில் ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருநாள் வருவாய் வசூலில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.