தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவுத் துறை மீண்டும் உறுதி

வாஷிங்டன்: “தீ​விர​வாதத்​துக்கு எதி​ரான நடவடிக்​கைகளுக்கு பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு இருக்​கிறது’’ என்று அமெரிக்கா மீண்​டும் திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளது. காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிபர் ட்ரம்ப், தீவிர​வாதத்தை ஒடுக்க இந்​தியா எடுக்​கும் நடவடிக்​கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்​கும் என்று ஏற்​கெனவே அறி​வித்​தார். மேலும், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸ், வெளி​யுறவுத் துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ உட்பட அமெரிக்க நிர்​வாகத்​தின் முக்​கிய பொறுப்​பு​களில் உள்ள பலரும் இந்​தி​யா​வுக்கு ஆதர​வாக கருத்து தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், மீண்​டும் அமெரிக்க வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் டாமி புரூஸ் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பஹல்​காமில் நடந்த தீவிர​வாத தாக்​குதலுக்​குப் பிறகு இந்​தியா – பாகிஸ்​தான் இடையே பதற்​றம் எழுந்​திருக்​கிறது. இரு நாடு​களின் வெளி​யுறவுத் துறை அமைச்​சர்​களு​டன் அமெரிக்க வெளி​யுறவுத் துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ 2 நாட்​களுக்கு முன்​னர் தொலைபேசி​யில் பேச்​சு​வார்த்தை நடத்தி உள்​ளார்.

இந்​தி​யா​வும் பாகிஸ்​தானும் போர் பதற்​றத்தை தணிக்க வேண்​டும் என்று அப்​போது அவர் வலி​யுறுத்​தி​யுள்​ளார். மேலும், பஹல்​காம் தாக்​குதல் தொடர்​பாக இந்​தி​யா​வுடன் நேரடி பேச்​சு​வார்த்தை நடத்த வேண்​டும் என்று பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்​பிடம் மார்கோ ரூபியோ வலி​யுறுத்தி கூறி​யுள்​ளார்.

அமெரிக்​கா​வின் பல்​வேறு துறை​களை சேர்ந்த அதி​காரி​களும் இந்​தியா – பாகிஸ்​தான் அதி​காரி​களு​டன் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர். இரு​நாடு​களும் சமுக​ தீர்வை காண வேண்​டும். எனினும், இரு நாடு​களுக்கு இடை​யில் நடை​பெறும் நடவடிக்​கைகளை உன்​னிப்​பாக கண்​காணித்து வரு​கிறோம். இவ்​வாறு டாமி புரூஸ் கூறி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.