ரோகித், கோலிக்கு பிறகு ஓய்வை அறிவிக்கப்போவது இவரா? வெளியான தகவல்!

இந்திய டெஸ்ட் அணி ஐபிஎல் தொடர் முடிந்ததும் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை நேற்று முன்தினம் (மே 24) பிசிசிஐ வெளியிட்டது. அந்த அணிக்கு கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ரிஷப் பண்டும் நியமிக்கப்பட்டிருந்தனர். 

மேலும், அந்த அணி வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, சிராஜ் ஆகியோ இடம் பிடித்திருந்தனர். ஆனால் முகமது ஷமியின் பெயர் அதில் இல்லை. இதற்கு காரணம் அவரால் நீண்ட நேரம் பந்து வீச முடியாது தான் என தகவல்கள் வெளியாகி உள்ளது. முகமது ஷமியின் டெஸ்ட் கரியரும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் பிசிசிஐ வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. 

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடந்த சில ஆண்டுகளாகவே காயத்தால் அவதிபட்டு வருகிறார். 2023 உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட அவர், அதன் பின்னர் இந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னர் தான் இந்திய அணிக்கு திரும்பினார். சாம்பின்ஸ் டிராபியிலும் அவர் சிறப்பாகவே செயல்பட்டார். 

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலும் அவர் இடம் பெறவில்லை. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் இடம் பெறவில்லை. அவரை பரிசோதித்த பிசிசிஐ விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவ குழுவினர் அவரால் டெஸ்ட் போட்டிகளில் நிறைய ஓவர்களை வீச முடியாது. அதற்கான உடல் தகுதி அவரிடம் இல்லை என அறிக்கை அளித்துள்ளனர். 

இதனாலேயே அவரை இனி டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் என பிசிசிஐ முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், முகமது ஷமி 34 வயதும் ஆகிவிட்டதால், அவர் இனி டெஸ்ட் தொடர்களுக்கு தயாராவதும் கடினம் என்பதை மனதில் வைத்து பிசிசிஐ அவரை தேர்வு செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.  

மேலும் படிங்க: 2025 ஐபிஎல்லுக்கு பிறகு ஆர்சிபி கழட்டிவிடப்போகும் இந்த 4 வீரர்கள்!

மேலும் படிங்க: MI: மும்பை இந்தியன்ஸ் கழட்டிவிடும் இந்த வீரர்கள்… சிஎஸ்கே நிச்சயம் குறிவைக்கும்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.