ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்கி உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் குஜராத் அணிகள் இந்த சுற்றுகளுக்கு தகுதி பெற்றுள்ளன. பிளே ஆஃப் சுற்றுகள் நேற்று தொடங்கிய நிலையில், குவாலிஃபையர் 1 நடந்து முடிந்துள்ளது. அதில் புள்ளிப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆர்சிபி அணி 101 ரன்களில் சுருட்டியது. இதையடுத்து. 102 ரன்கள் என்ற இலக்கை வெறும் 10 ஓவர்களில் எட்டி இறுதி போட்டிக்கு ஆர்சிபி அணி முன்னேறி உள்ளது. தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு சென்றுள்ளது. அதில் இன்று நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும்.
குவாலிஃபையர் 2 சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இறுதி போட்டியில் ஆர்சிபி அணி மோதும். ஆர்சிபி அணி 4வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்த ஆண்டு மிகவும் வலுவான நிலையில் உள்ளதால், நிச்சயம் கோப்பையை வெல்லும் என ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தீவிர ரசிகர் ஒருவர் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. வரும் ஜூன் 3ஆம் தேதி நடக்க இருக்கும் ஐபிஎல் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் விடுமுறை கொடுத்து, ரசிகர்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் படிங்க: IPL 2025, GT vs MI : குவாலிஃபையர் 2 போட்டி முடிவை தீர்மானிக்கும் மும்பை, குஜராத் அணிகளின் 4 முக்கிய பிளேயர்கள்..!!
மேலும் படிங்க: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகளில் மிக குறைவான ஸ்கோரை அடித்த அணிகள் எவை? பஞ்சாப் அணிக்கு எந்த இடம்?