சிந்து நதியை ‘தடுக்கும்’ கட்டமைப்பு மீது தாக்குவோம்: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, நதியில் இந்தியா ஏதாவது புதிய கட்டமைப்பை உருவாக்கினால், அதனைத் தாக்குவோம்” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் எச்சரித்துள்ளார். ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு அமைச்சர் கவாஜா அசிஃப் அளித்த பேட்டியில், “சிந்து நதியில் புதிதாக எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவது, இந்தியாவின் ஆக்கிரமிப்பாக பார்க்கப்படும். அவர்கள் சிந்து நதியில் ஏதாவது கட்டமைப்பைக் கட்ட முயன்றால், அதனை நாங்கள் … Read more

பாராட்டுக்களைக் குவிக்கும் மனிதர்கள் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மனிதர்கள்”.

STR 49: `கல்லூரி மாணவராக சிம்பு!' – பூஜையுடன் தொடங்கிய சிம்புவின் 49-வது படம்

சிம்புவின் 49-வது திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. சிம்புவுடன் கயாடு லோகர், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களை தாண்டி படத்தில் சிம்புவுடன் சந்தானமும் முக்கியக் கேரக்டரில் நடிப்பதற்கு கமிட் செய்யப்பட்டிருக்கிறார். கடைசியாக சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் இணைந்து நடித்திருந்தார் சந்தானம். STR 49 Pooja அதன் பிறகு சந்தானம் நடித்த ‘சக்கப் போடு போடு ராஜா’ படத்திற்கு சிம்பு இசையமைத்திருந்தார். நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைவதால் … Read more

Wifi பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை – உங்கள் பேங்க் பேலன்ஸ் காலியாகும்

Central Government Free WiFi Warning : பொது இடங்களில் இலவசமாக கிடைக்கும் வைஃபை சிக்னலை பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளது. இலவச வைஃபை மூலம் இமெயில் பார்ப்பது, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியா கணக்குகளில் லாகின் செய்வது எல்லாம் மிகப்பெரிய ஆபத்தை கொண்டு வரும் என எச்சரிக்கை கொடுத்திருக்கும் மத்திய அரசு இதன் மூலம் உங்கள் வங்கி கணக்குகளின் தரவுகள் களவாடப்பட்டு, பேங்க் பேலன்ஸ் கூட உங்களுக்கு தெரியாமலேயே திருடப்பட்டகூடிய … Read more

மே 5ந்தேதி வணிகர்கள் தினம் – கடைகளுக்கு விடுமுறை: மதுராந்தகம் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: வணிகர்கள் தினத்தை முன்னிட்டு  மே 5ந்தேதி  தமிழ்நாடு முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  மதுராந்தகத்தல் நடைபெறும் வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையிலான வணிகர்கள்   மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். வணிகர் தினத்தையொட்டி, மே 5ந்தேதி தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்கர்கள் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி கொண்டாடி வருகின்றனர். அதன்படி நடப்பாண்டும், வணிகர்கள் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை மற்றும்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது … Read more

அடுத்த ஆண்டு தேர்தல்; திமுக, அதிமுக, பாஜக நடத்திய கூட்டங்கள்.. பரபரக்கும் அரசியல் நகர்வுகள்!

நேற்று அதிமுக செயற்குழு கூட்டம், இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் பாஜகவின் மையக்குழு கூட்டம் என்று இப்போதே தேர்தல் பரபரப்பு தமிழ்நாட்டை பற்றிக் கொண்டுவிட்டது. பிற கட்சிகளுமே ஆலோசனைகள், கூட்டங்கள், பேச்சுகள் என தங்களது பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர். ‘நூலிழையில்…’ – எடப்பாடி பழனிசாமி நேற்று நடந்த அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில், அதிமுகவின் பொதுசெயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கடந்த சட்டசபை தேர்தலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்தது. … Read more

புதுச்சேரியில் மே 20-ல் பந்த்: ஏஐடியூசி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இம்மாதம் 20-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என ஏஐடியூசி தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் சார்பாக தனித்தும், கூட்டாகவும் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்துள்ளதோடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், சட்டத் திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி தேசிய பேரவை விவாதித்தது. இதையடுத்து நாடு தழுவிய அளவில் வரும் 20-ம் தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவது சம்பந்தமான … Read more

‘எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் அமலாக்கத் துறையின் 98% வழக்குகள், எஞ்சிய 2%…’ – திரிணமூல் எம்.பி

கொல்கத்தா: “2014-ம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் அமலாக்கத் துறையால் தொடுக்கப்படும் 98% வழக்குகள் எதிர்க்கட்சிகளைக் குறிவைப்பதாகவே உள்ளன. எஞ்சியுள்ள 2 சதவீதம் வழக்குகள், பாதிக்கப்பட்ட பிறகட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால் சலவை இயந்திரத்தில் வெளுக்கப்பட்டவை ஆகிவிடுகின்றன” என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாக்கெட் கோகலே தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த வியாழக்கிழமையன்று அமலாக்கத் துறை 69-ம் ஆண்டை நிறைவு செய்ததை ஒட்டி நடந்த நிகழ்வில் பேசிய அதன் இயக்குநர் ராகுல் … Read more

450 கி.மீ தூரம் பாய்ந்து தாக்கவல்ல ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக பாகிஸ்தான் தகவல்

புதுடெல்லி: தரையிலிருந்து தரைக்கு 450 கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கவல்ல ஏவுகணை சோதனையை வெற்றிகரமாகச் செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை அப்தலி வெப்பன் சிஸ்டம் (Abdali Weapon System) என்று அந்நாட்டு ராணுவத்தால் அழைக்கப்படுகிறது. இந்தச் சோதனையை எக்சர்சைஸ் இண்டஸ்-ன் (Exercise INDUS) ஒரு பகுதியாக செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். … Read more

தபால் சேவை இனி இருக்காது – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய அரசு பாகிஸ்தானில் இருந்து வரும் வான்வழி மற்றும் தரைவழி தபால் பரிமாற்றத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது.