IPL 2025, PBKS vs MI Qualifier 2: இன்று நடக்கும் ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரின் மிக மிக முக்கியமான போட்டி இது. குஜராத் மாநிலம், அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சாம்பியன் பட்டத்துக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதும் வாய்ப்பை பெறும். அதனால் இன்றைய போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஐபிஎல் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெல்லுமா? பஞ்சாப் கிங்ஸ் வெல்லுமா? என ஆவலோடு காத்திருக்கின்றனர். யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் : யார் வெற்றி பெறுவார்கள்?
ஐபிஎல் 2025 தொடரைப் பொறுத்தவரை சிறப்பாக இதுவரை ஆடியிருக்கும் அணிகள் என்றால் பார்த்தால், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என இரண்டையுமே சொல்லலாம். பஞ்சாப் அணி சீரான ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. மும்பை அணி ஐபிஎல் 2025 தொடரின் பிற்பகுதியில் புது உத்வேகத்தை எடுத்து இப்போது குவாலிஃபையர் 2 சுற்றுக்கு வந்திருக்கிறது. இந்த இரண்டு அணிகளில் யார் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்றால், டாஸ் தான் தீர்மானிக்கும். ஏனென்றால் டாஸ் வெற்றி பெற்று பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் ஆடிவிட்டால் ஓரளவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்லலாம். ஒருவேளை பஞ்சாப் 2வது பேட்டிங் ஆட நேர்ந்தால் கொஞ்சம் சவால் தான். ஏனென்றால் மும்பையின் பவுலிங் யூனிட் அப்படி. பும்ரா, போல்ட் என்ற படையே இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற வாய்ப்பு
ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் ஆடினால் தோற்பதற்கான வாய்ப்பு அதிகம் தான். ஏனென்றால் அந்த அணியின் பேட்டிங் பஞ்சாப் அணியுடன் ஒப்பிடும்போது பலவீனம் தான். அதேநேரத்தில் எல்லா போட்டிகளிலும் சீரான பேட்டிங்கை மும்பை இந்தியன்ஸ் வெளிப்படுத்துவதில்லை. சூர்யகுமார் யாதவ் மட்டுமே தொடர்ச்சியாக பேட்டிங்கில் அந்த அணியில் ஜொலித்து வருகிறார். மற்றபடி பவுலிங்கில் அந்த அணி பலம் வாய்ந்ததாக இருக்கிறது. அதற்கு ஏற்ப பேட்டிங் சப்போர்ட் செய்தால் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை தடுக்க முடியாது.
சூரியகுமார் யாதவின் தந்திரம்
இதுதவிர மிகவும் ஹை பிரஸ்ஸரான போட்டிகளில் அதிகம் ஆடிய அனுபவம் கொண்ட அணி மும்பை இந்தியன்ஸ். குறிப்பாக நாக்அவுட் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஒப்பிடும்போது அதிகம் விளையாடி அதில் வெற்றிகளையும் பெற்றுள்ள அணி மும்பை இந்தியன்ஸ். அதனால், நாக்அவுட் போட்டிகளில் வரும் நெருக்கடிகளை மும்பை அணி சூழலுக்கு ஏற்ப சரியாக கையாளும். ஐபிஎல் தொடரிலேயே அந்த அணியின் ரெக்கார்டை பார்த்தால் உங்களுக்கு புரியும். சில தந்திரங்களையும் மும்பை இந்தியன்ஸ் பயன்படுத்தும். அதற்கு உதாரணம், குஜராத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அந்த அணி பேட்டிங் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தது. மும்பை ஸ்கோரை சேஸிங் செய்யும் வகையில் அந்த அணி அதிரடியாக விளையாடியது.
உடனே தந்திரத்தை கையில் எடுத்தார் சூர்யகுமார் யாதவ். வேகமாக செல்லும் போட்டியை ஸ்லோ டவுன் செய்ய வேண்டும் என்பதற்காக தசை பிடிப்புபோல் களத்தில் படுத்துக் கொண்டார். ஆறு ஏழு நிமிடங்கள் இதனால் போட்டி நின்றது. இதன்பிறகு போட்டி தொடங்கியதும் மும்பை அணி பவுலிங்கில் கம்பேக் கொடுத்து வெற்றி பெற்றது. இந்த டெக்னிக்கை இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலக க்கோப்பை இறுத்திப்போட்டியில் பயன்படுத்தியது. தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும் சூழலில் இருந்தபோது ரிஷப் பந்த் தசைபிடிப்பு என படுத்துக்கொண்டு போட்டியை தாமதப்படுத்தினார். அதே யுக்தியை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் பின்பற்றினார்.
பஞ்சாப் கிங்ஸ் வெல்லும் வாய்ப்பு உள்ளதா?
இதுவரை நடைபெற்ற போட்டிகளிலும், கடந்த கால வரலாறுகளையும் புரட்டிப் பார்த்தால் நாக்வுட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்துவது அவ்வளவு எளிதானது அல்ல. எப்பேர்பட்ட சூழலையும் மும்பை இந்தியன்ஸ் அணி தனக்கானதாக மாற்றிக் கொள்ளக்கூடிய வலிமை இருக்கிறது. இந்த விஷயத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி பதப்பட்டாமல், போட்டி மிகவும் பரபரப்பாக செல்லும் போது நிதானமான வியூகங்களை அப்ளை செய்தால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த முடியும். மற்றபடி மும்பை இந்தியன்ஸ் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை முறியடித்தால் பஞ்சாப் கிங்ஸ் புதிய வரலாறு படைக்கலாம்.