புதுடெல்லி: இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,026 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரம் கூறுகிறது.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன் கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் மகாராஷ்டிராவில் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் இதுவரை கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.