கேப்டன்சி கிடைக்காத வருத்தத்துடன் ஓய்வை அறிவித்த 5 வீரர்கள்!

இந்திய அணிக்கு கேப்டன் ஆவது ஒவ்வொரு வீரர்களின் கனவாக இருக்கும். அணிக்குள் வரும்போது ஓய்வு பெறுவதற்குள் எப்படியாவது கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற ஆசை அனைத்து வீரர்களுக்கு இருக்கும். இருப்பினும் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. தோனிக்கு அணிக்குள் வந்த மூன்று ஆண்டுகளிலேயே இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சச்சின் போன்ற பல சாதனைகளை புரிந்தவர்களுக்கு கேப்டன்சி பதவி கிடைக்கவில்லை, கிடைத்தும் அதனை பயன்படுத்தி கொள்ள முடியவில்லை. இந்திய அணியில் சிறப்பாக விளையாடி ஸ்டார் வீரராக இருந்தபோதிலும் கடைசி வரை கேப்டன்சி கிடைக்காத 5 வீரர்களை பற்றி பார்ப்போம். 

மேலும் படிங்க: ஆர்சிபி அணியில் இருந்து விலகுகிறாரா கோலி? என்ன பிரச்சனை?

ரவிச்சந்திரன் அஸ்வின்

தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்கு பல முக்கியமான போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் அஸ்வின் 2016 ஆம் ஆண்டு ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்று விருதை வென்றார். மேலும் சமீபத்தில் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் தனது ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட் பற்றிய அதிகமான அறிவு இருந்த போதிலும் அஸ்வினுக்கு இந்திய அணிக்கு கேப்டன் ஆகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் அஸ்வின் 537 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்களும், 3 ஆயிரத்திற்கு அதிகமான ரன்களையும் அடித்து சிறந்த ஒரு ஆல் ரவுண்டாக இருந்தார். 11 முறை டெஸ்ட் தொடர்களில் தொடர் நாயகன் விருதும் வென்றுள்ளார் அஸ்வின்.

ஜாகீர் கான் 

இந்திய அணியில் இருந்த மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஜாகீர்கானும் ஒருவர். அர்ஜுனா விருது பெற்று இருந்தாலும் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. பும்ராவை போலவே ஜாகிர் கானுக்கும் அதிகமான காயம் ஏற்பட்டது, இதனால் அதிக நாட்கள் விளையாடாமல் இருந்தார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெல்வதற்கு ஜாகிர் காணும் ஒரு முக்கிய காரணம். ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் இருந்த ஜாகீர் கானுக்கு கடைசிவரை கேப்டன்சி கிடைக்கவில்லை.

விவிஎஸ் லட்சுமணன் 

இந்திய டெஸ்ட் அணியில் சிறந்த வீரர்களில் ஒருவர் விவிஎஸ் லட்சுமணன். பல முக்கியமான கட்டங்களில் தனி ஒருவராக இருந்து அணிக்கு வெற்றியை வாங்கி கொடுத்துள்ளார். விவிஎஸ் லட்சுமணன் டெஸ்ட் அணியில் இருக்கும் வரை எதிர் அணிகளுக்கு ஒரு பயம் ஏற்படும். 2001 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் தனி ஒருவராக 281 ரன்கள் அடித்தார். இருப்பினும் விவிஎஸ் லட்சுமணனிற்கு கடைசி வரை கேப்டன்சி கிடைக்கவில்லை.

ஹர்பஜன் சிங் 

2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வென்ற அணிகளில் முக்கியமான வீரராக இருந்தார் ஹர்பஜன் சிங். இவரது வித்தியாசமான பவுலிங் எதிர் அணி வீரர்களை கலங்கடிக்க செய்தது. இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளும், 236 ஒரு நாள் போட்டிகளும், 28 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் 417 டெஸ்ட் விக்கெட்களும், 269 ஒரு நாள் போட்டி விக்கெட்களும் எடுத்துள்ளார். இவ்வளவு சாதனைகள் புரிந்த போதிலும் ஹர்பஜன் சிங்குக்கு இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

யுவராஜ் சிங்

ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் 2011 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி இருந்தார். மொத்தமாக 362 ரன்களும், 15 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார். கேன்சரால் பாதிக்கப்பட்ட யுவராஜ் அதனை கடந்து வந்து சாதனை படைத்தார். பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது போன்ற விருதுகளையும் வென்றுள்ளார். இருப்பினும் அவருக்கு இந்திய அணியின் கேப்டன் ஆகும் வாய்ப்பு கடைசி வரை கிடைக்கவில்லை. 40 டெஸ்ட் போட்டி, 304 ஒரு நாள் போட்டி, 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் யுவராஜ் சிங். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார்.

மேலும் படிங்க: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டே இந்த பிளேயர் தான்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.