திருச்சி: திருச்சி அருகே பெண் சப்கலெக்டர் சென்று கொண்டிருந்த அரசு ஜீப், சாலையோரம் நின்றிருந்த ஜெ.சி.பி. எந்திரம் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் பெண் சப்கலெக்டர் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி உதவி கலெக்டராக (கோட்டாட்சியர்) இருந்தவர் ஆரமுத தேவசேனா (வயது 50). இவர் இன்று காலை அலுவலக ஜீப்பில் முசிறியில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டார். […]
