Ind vs Eng Test Series: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், நாளை (ஜூன் 20) முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கி 5 நாட்கள் ஜூன் 24ஆம் தேதி வரை நடைபெறும். இது 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி ஆகும்.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வுக்கு பின் நடக்கும் முதல் டெஸ்ட் தொடர் என்பதால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. புதிய கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சுப்மன் கில் மற்றும் ரிஷ்ப் பண்ட்டிற்கு இந்த டெஸ்ட் தொடர் பெரிய சவாலகவே இருக்கும். அணியை வழிநடத்துவதன் மட்டுமல்லாமல், இருவரும் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆட வேண்டும். குறிப்பாக ரிஷப் பண்ட் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். நிதானம் கலந்த அதிரடியை நம்மால் களத்தில் காண முடியும். மேலும், தொடக்க வீரர்களில் கே.எல். ராகுல் மற்றும் அதிரடி வீரரான ரிஷப் பண்ட் இருவரும் பேட்டிங்கில் செயல்படுவது குறித்து இந்திய அணியின் வெற்றி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் இந்த டெஸ்ட் தொடரில் புதிய சாதனை படைக்க வாய்ப்புள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம். எஸ். தோனியை பின்னுக்கு தள்ளி சாதனை படைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் இதுவரை 6 சதங்கள் அடித்து தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை தோனி பெற்றிருந்த நிலையில், ரிஷப் பண்ட் அதனை சமன் செய்தார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் இன்னும் ஒரு சதம் அடித்தால், 7 சதங்களுடன் தோனியை முந்தி இந்தியாவின் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெறுவார். இதுவரை 6 சதங்களை அடித்த ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிராக 3, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக தலா 1 சதங்களை அடித்துள்ளார்.
மற்றோரு சாதனைக்கும் வாய்ப்பு
பந்த் SENA நாடுகளில் விளையாடிய 26 போட்டிகளில் 1681 ரன்கள் எடுத்துள்ளார். அதே சமயம் முன்னாள் வீரர் தோனி SENA நாடுகளில் 1732 ரன்கள் எடுத்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், பந்த் இந்த போட்டியில் 50+ ரன்கள் எடுத்தால், SENA நாடுகளில் அதிக ரன்கள் எடுத்த ஆசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவமான தெரிய பண்ட்டுக்கு பென்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியிலேயே இதனை செய்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிங்க: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சாய் சுதர்சனுக்கு இடம் இருக்கா? போட்டி போடும் மூன்று வீரர்கள்!
மேலும் படிங்க: ’சிங்கம் போல் வேட்டையாடுவார்’ இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு மைக்கேல் வாகன் எச்சரிக்கை