ஆந்திர மதுபான ஊழல் வழக்கு: இலங்கைக்கு தப்ப முயன்ற முன்னாள் எம்எல்ஏ கைது

திருப்பதி: ஆந்​தி​ரா​வில் ஜெகன் ஆட்​சி​யின் போது நடை​பெற்ற மது​பான கொள்கை ஊழல் குறித்த விசா​ரணை​யில் ரூ.1000 கோடிக்​கும் மேல் ஊழல் நடந்​துள்​ளது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

இவ்​வழக்​கில் சந்​திரகிரி பேரவை தொகு​தி​யின் முன்​னாள் எம்எல்ஏ​வும், திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் முன்​னாள் சிறப்பு அறங்​காவலர் குழு உறுப்​பினரு​மான செவிரெட்டி பாஸ்​கர் ரெட்​டியை ஆந்​திர போலீ​ஸார் செவ்​வாய்க்கிழமை இரவு பெங்​களூரு விமான நிலை​யத்​தில் கைது செய்​தனர். இவர் இலங்கை தப்​பிச்செல்ல முயன்​ற​தாக கூறப்​படுகிறது.

இவ்​வழக்​கில் ஏற்​கெனவே கைதான முக்​கிய குற்​ற​வாளி​யான கசிரெட்டி ராஜசேகர ரெட்​டி​யிட​மிருந்து சுமார் ரூ.300 கோடி வரை செவிரெட்டி பாஸ்​கர் ரெட்டி பெற்​றுள்​ளார் என்​பதும், அந்த பணத்​தில் ரூ.5 கோடியை ஜெகன் கட்​சியை சேர்ந்த முன்​னாள் எம்பி யிடம் செவிரெட்டி வழங்​கி​னார் என்​றும் சிறப்பு விசா​ரணை குழு ஆதா​ரங்​களு​டன் நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.