சென்னை: பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றம் பல முறை அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற ஆணையை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழகக் காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவான சிறுமி மீதான பாலியல் வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து இறுதி […]
