7 மாதங்களுக்கு முன்பே நாங்கள் அறிவித்த திட்டம்: நிதிஷ் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பாட்னா: முதி​யோர் பென்​ஷன் தொகையை ரூ.400-லிருந்​து, ரூ.1,100- ஆக உயர்த்தி முதல்​வர் நிதிஷ்கு​மார் அறி​வித்தது பற்றி ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

பிஹார் தேர்​தலில் பாஜக-ஐக்​கிய ஜனதா தளக் கூட்​ட​ணிக்​கும், ஆர்ஜேடி, காங்​கிரஸ் கட்​சிகள் அடங்​கிய கூட்​ட​ணிக்​கும் இடையே கடும் போட்டி உள்ளது. இந்​நிலை​யில் தேஜஸ்வி யாதவ் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார், தற்​போது சுயநினை​வின்றி உள்​ளார். செயல்​ப​டாத முதல்​வ​ராக இருக்​கிறார். அவரால் அவரது கட்சி வேட்​பாளர்​களைக் கூட தேர்வு செய்ய முடி​யாத நிலை​யில் உள்​ளார். அவருக்கு பதிலாக ஐக்​கிய ஜனதா தள கட்சி வேட்​பாளர்​களைக் கூட மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தான் தேர்வு செய்​யப் போகிறார்.

பிஹாரில் மெகா கூட்​டணி கூட்​டணி ஆட்​சி​யில் இருந்​த​போது பென்​ஷன் தொகை உயர்வு உள்​ளிட்ட திட்​டங்​களைக் கொண்டு வந்​தது. அந்​தத் திட்​டங்​களை அப்​படியே காப்​பியடித்து தற்​போது தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) அரசு செயல்​பட்டு வரு​கிறது. நாங்​கள் 7 மாதங்களுக்கு முன்பே கொடுத்த அறி​விப்​பு​களை​யெல்​லாம், தாங்​கள் கொண்டு வந்து செயல்​படுத்​து​வது போல அவர்​கள் செயல்​படு​கின்​றனர். இவ்​வாறு தேஜஸ்வி யாதவ் கூறி​யுள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.