கர்நாடக தர்மஸ்தலா கோயிலில் பாலியல் கொலைகள் குறித்து சிஐடி விசாரணைக்கு உத்தரவு

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் தட்​சின கன்னட மாவட்​டம் தர்​மஸ்​தலா​வில் உள்ள மஞ்​சு​நாதா கோயில் மிக​வும் பிரசித்தி பெற்​றது. அந்த கோயி​லில் 10க்​கும் மேற்​பட்ட பெண்​கள் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​க‌ப்​பட்​டு, கொலை செய்​யப்​பட்​ட​தாக தகவல் வெளி​யானது.

இதுகுறித்து தர்​மஸ்​தலா கோயி​லில் துப்​புரவு பணி​யாற்​றிய 52 வயதான ஒரு​வர், போலீ​ஸில் புகார் அளித்​தார். இதையடுத்து தர்மஸ்தலா போலீ​ஸார் கோயில் நிர்​வாகத்​தின் மீது 3 பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இதனை தொடர்ந்து 65 வயதான பெங்​களூரு​வைச் சேர்ந்த பெண் ஒரு​வர், ‘‘கடந்த 2003ம் ஆண்டு தர்​மஸ்​தலா கோயிலுக்கு சென்ற தனது 22 வயது மகள் திடீரென காணா​மல் போனார். இதுகுறித்து போலீ​ஸில் புகார் அளித்த போது, என்னை தாக்கி சித்​ர​வதை செய்தனர். என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்​டும்” என குடியரசு தலை​வருக்கு கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இதுகுறித்து, வழ‌க்​கறிஞர் வேலன் கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் முறை​யிட்​டார். இந்த விவகாரத்தை சிறப்பு புல​னாய்வு விசாரணைக்கு மாற்ற வேண்​டும் என்று பலர் வலி​யுறுத்​தினர்.

இதையடுத்து கர்​நாடக அரசு, ‘‘தர்​மஸ்​தலா பாலியல் கொலை வ‌ழக்கு சிஐடி விசா​ரணைக்கு உத்​தர​விடப்​படு​கிறது. டிஜிபி பிர​னாப் மொஹந்தி தலை​மையி​லான குழு​வினர் வழக்கு குறித்து வி​சா​ரித்​து, அரசிடம் விரை​வில் அறிக்கை தாக்​கல் செய்​யும்​” என தெரி வித்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.