திம்பு,
7-வது ஜூனியர் மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) பூட்டான் தலைநகர் திம்பில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 4 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.
இதில் இந்திய அணி தனது முதல் 4 ஆட்டங்களிலும் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த சூழலில் இந்திய அணி தனது 5-வது ஆட்டத்தில் மீண்டும் நேபாளத்துடன் மோதியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை பந்தாடி தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்தது. அத்துடன் சாம்பியன் பட்டத்தையும் உறுதி செய்தது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை எதிர்கொள்கிறது.