"உங்களைப் போன்ற ஒரு மனிதராக இருக்க பெரிய மனசு வேண்டும்" – அல்லு அர்ஜுன் பற்றி அஸ்வத் மாரிமுத்து

`ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘டிராகன்’ படத்தை இயக்கி இருந்தார்.

இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

அஸ்வத் மாரிமுத்து
அஸ்வத் மாரிமுத்து

ரஜினி காந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நேரில் அழைத்து அஸ்வத் மாரிமுத்தைப் பாராட்டி இருந்தனர்.

‘டிராகன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிலம்பரசனின் 51-வது படத்தை இயக்கவிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தை நேரில் சந்தித்திருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.

இதுதொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “உண்மையிலேயே நீங்கள் ஒரு ஜென்டில்மேன்.

உங்களுடைய அன்புக்கும், என்னுடைய வேலையைப் பாராட்டிய உங்களுடைய வார்த்தைகளுக்கும் நன்றி. அவை எனக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

உங்களைப் போன்ற ஒரு மனிதராக இருக்கப் பெரிய மனது வேண்டும் சார்” என்று அல்லு அர்ஜுன் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

அதுபோல, “சிறந்த தோழராகவும், நல்ல மனிதராகவும் இருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் சாருக்கும் நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.