சென்னை: புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகள், ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும், என்றும், ரயிலில் ஏறாத மற்றவர்களுக்காக இருக்கைகளைப் பிடித்து வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே ,பயணிகள் எதிர்சீட்டில் கால் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், புறநகர் ரயில்களில் சக பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் பயணத்தின் ஒழுங்கைக் குலைக்கும் […]
