சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் பல மாவட்டங்களில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் வசதிக்காக, விடுமுறை தினங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி, பண்டிகை காலங்கள், வார விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அரசு […]
