ஷென்சென்,
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரிய வீராங்கனை செ யங் ஆகியோர் மோதினர் .
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செ யங் 21-14 , 21-13 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் பிவி சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
Related Tags :