ஸ்ரீராமர் படத்தை அவமதித்த வழக்கில் திருச்சியில் ஐந்தாம் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் 4 பேர் கைது

திருச்சி: ​திருச்சி அருகே ராமர் படத்தை தீ வைத்து எரித்த ஐந்​தாம் தமிழ்ச் சங்க நிர்​வாகி​களை கண்​டித்து இந்து அமைப்​பினர் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதையடுத்​து, அந்த அமைப்​பின் நிர்​வாகி​கள் 4 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். திருச்சி மாவட்​டம் திரு​வெறும்​பூர் அரு​கே​யுள்ள அயன்​புத்​தூர் கிராமத்​தில் ஐந்​தாம் தமிழ்ச் சங்​கம் என்ற அமைப்பு சார்​பில் கடந்த 28-ம் தேதி இரவு ஆசிவக திரு​மால் வழி​காட்டு விழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இதில், அந்த அமைப்​பின் நிர்​வாகி​கள் 6 பேர் ராமர் படம் பொறிக்​கப்​பட்ட பிளக்ஸ் பேனரை அவம​தித்​ததுடன், தீ வைத்​துக் கொளுத்​தி​யுள்​ளனர். மேலும், ராமரை இழி​வாகப் பேசி​யதுடன், ராவணனைப் போற்​றும் வகை​யில் பேசி​யுள்​ளனர். அதை வீடியோ​வாக எடுத்து சமூக வலைதளங்​களில் பதிவேற்​றம் செய்​தனர்.

இதையடுத்​து, சமூக வலை​தளங்​களில் சட்​டம்​-ஒழுங்கு பிரச்​சினையை ஏற்​படுத்​தும் வகை​யில் உள்ள பதிவு​களை கண்​காணித்து வரும் காவலர் கார்த்​திக், இந்​தப் பதிவு மக்​களிடையே கலவரத்தை தூண்​டி, பொது அமை​திக்கு பங்​கம் விளைவிக்​கும் வகை​யில் இருப்​ப​தால், இந்த சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கும்​படி திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீ​ஸில் புகார் அளித்​தார்.

அதன்​பேரில், இச்​சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது 6 பிரிவு​களில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். தொடர்ந்​து, புதுக்​கோட்டை மாவட்​டம் விராலிமலை அரு​கே​யுள்ள கவரப்​பட்​டியை சேர்ந்த அடைக்​கல​ராஜ்(36) என்​பவரை போலீ​ஸார் கைது செய்​தனர். வழக்​கில் தொடர்​புடைய மற்​றவர்​களை தேடி வந்​தனர்.

இதற்​கிடையே, ராமர் அவம​திக்​கப்​பட்ட சம்​பவத்​தில் தொடர்​புடைய அனை​வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்​டும், அந்த அமைப்பை தடை செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்தி இந்து முன்​னணி, விஸ்வ இந்து பரிஷத் உள்​ளிட்ட இந்து அமைப்​பு​கள் சார்​பில், ஒருங்​கிணைப்​பாளர் என்​.ஆர்​.சீனி​வாசன் தலை​மை​யில் நேற்று முன்​தினம் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளரிடம் புகார் அளிக்​கப்​பட்​டது.

மேலும், ஒருங்​கிணைப்​பாளர் என்​.ஆர்​. சீனி​வாசன், பாஜக மாவட்​டத் தலை​வர் ஒண்​டி​முத்​து, மாநில மகளிரணித் துணைத் தலை​வர் புவனேஸ்​வரி உள்​ளிட்​டோர் தலை​மை​யில் குண்​டூர் எம்​ஐஇடி எதிரே நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. அப்​போது, ராமரை அவம​தித்த அமைப்பை தடை செய்ய வேண்​டும், அந்த அமைப்பை சேர்ந்​தவர்​களை குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தில் அடைக்க வேண்​டும் என்று அவர்​கள் வலி​யுறுத்​தினர்.

தொடர்ந்​து, ஐந்​தாம் தமிழ்ச் சங்க நிர்​வாகி​கள் நெப்​போலியன்​(31), சிலேஸ்​வரன்​(30), வசந்​தகு​மார் (21) ஆகியோரை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். பாண்​டியன் உள்​ளிட்​டோரை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.