திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: திருச்​சி, மதுரை, சேலம் உள்​ளிட்ட 12 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது. இது தொடர்​பாக மண்டல சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு:

வடகிழக்கு அரபிக்​கடல் பகு​தி​களில் தீவிர புயல் ‘சக்​தி’ நில​வு​கிறது. இது இன்று அரபிக்​கடல் பகு​தி​களில் வடகிழக்கு திசை​யில் நகர்ந்து படிப்​படி​யாக வலு​விழக்​கக்​கூடும். தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. தமிழகப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (அக்​.5) பெரும்​பாலான இடங்​களி​லும், நாளை முதல் முதல் வரும் 10-ம் தேதி வரை சில இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

இன்று கிருஷ்ணகிரி, தரு​மபுரி, சேலம், திருப்​பத்​தூர், நாமக்கல், திருச்​சி, திண்​டுக்​கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்​றும் ராம​நாத​புரம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான அல்​லது மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூரில் 12 செ.மீ., திண்​டுக்​கல்​லில் 11 செ.மீ., விழுப்​புரம் மாவட்​டம் அவலூர்​பேட்​டை, செம்​மேடு, திரு​வண்​ணா​மலை மாவட்​டம் கீழ்​பென்​னாத்​தூரில் 10 செ.மீ., மழை பதி​வாகி​யுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.