'ரோஹித் தொடர் ரன் அடிக்க மாட்டார்; விராட் கோலி தேவையில்லை' – கைஃப் சொல்வது என்ன?

Rohit Sharma, Virat Kohli: இந்திய அணி அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். ஓடிஐ மற்றும் டி20ஐ தொடர்களுக்கான இரு அணிகளின் ஸ்குவாடும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Add Zee News as a Preferred Source

இதுவே கடைசி ஆஸ்திரேலிய தொடர்

இன்னும் 10 நாள்களில் ஓடிஐ தொடர் தொடங்குகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ரோஹித் சர்மா கேப்டன்ஸியில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இதுதான் கடைசி ஆஸ்திரேலிய தொடராகவும் இருக்கும். இத்தொடருக்கு பின் உள்நாட்டில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணியுடன் விளையாட இருக்கிறது.

2027 வரை விளையாடுவார்களா?

அப்படியிருக்க, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2027 ஐசிசி உலகக் கோப்பை வரை இந்திய அணியில் விளையாடுவார்களா என்பதே சந்தேகம்தான். அவர் தற்போதைக்கு சீனியராக, ஓபனிங்கில் ரன்களை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். விராட் கோலியும் நம்பர் 3இல் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

முகமது கைஃப் கருத்து

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் அவரது யூ-ட்யூப் சேனலில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து பேசியிருக்கிறார். அதில் ரோஹித் சர்மாவின் ஃபார்மை ஓரிரு போட்டிகளை மட்டும் வைத்து எடைப்போடக்கூடாது என்றும் விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு குறித்தும் அவர் விவரித்துள்ளார்.

ரோஹித் சர்மா தொடர்ச்சியாக அடிக்க மாட்டார்…

ரோஹித் சர்மா குறித்து கைஃப் பேசுகையில்,”ரோஹித் கேப்டனாக இல்லை, அவர் பல வருடங்களாக விளையாடி வருகிறார். 20 முதல் 30 ரன்கள் வரை அடிப்பார். ஆனால் முக்கிய போட்டிகளில் 80 ரன்களை அடிப்பார். இது ஒரு போட்டியை தனியாக வென்றுகொடுக்கும் இன்னிங்ஸ் ஆகும். மேலும் இப்படிதான் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை இருந்திருக்கிறது. அவருக்கும் கோலிக்கும் உள்ள வித்தியாசமே, கோலி நிலைத்தன்மை உடன் தொடர்ச்சியான ரன்களை கொண்டுவருவார். மறுமுனையில் ரோஹித் சர்மா மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை கொண்டு வருவார். இவர்களை தேர்வு செய்வதில் தேர்வாளர்களுக்கு மிக கடினமாக இருக்கும்” என்றார்.

விராட் கோலி தேவையில்லையா?

விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு குறித்து பேசிய அவர், விராட்டின் ஓய்வுக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறுகிறார். இதுகுறித்து அவர், “விராட் கோலி போராடிக் கொண்டிருந்தார். அவரது ஓய்வுக்குப் பின்னால் இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போகும் பந்தை அடிப்பது அவரது பலவீனமாக இருந்தது. இது வெளிப்பட்டதால் அவரால் ரன்களை அடிக்க முடியவில்லை. இரண்டாவது, அவர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாட விரும்பினார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு கூட செல்ல விளையாட விரும்பினார். ஆனால் அணிக்குள் சில விஷயங்கள் நடந்தன. இது இந்திய அணிக்கு அவர் தேவையில்லை என்பதை அவருக்கு உதவ வைத்தது” என்றார். 

மேலும் படிக்க | இதை செய்தால்தான் அணியில் இடம் கிடைக்கும்.. கம்பீர் கண்டிஷன்! மனம் திறந்த வருண் சக்கரவர்த்தி!

மேலும் படிக்க |கம்பீர் பேச்சை கேட்கவில்லை என்றால்.. இதுதான் கதி.. ரோகித் விவகாரத்தில் முன்னாள் வீரர்!

மேலும் படிக்க | கம்பீரை சீண்டும் ரோஹித் சர்மா…? சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல டிராவிட் தான் உதவினாரா?

 

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.