ரூ.90 லட்சம் கொடுத்து கடன் களங்கத்தில் இருந்து 290 ஏழை விவசாயிகளை மீட்ட சூரத் தொழிலதிபர்

சூரத்: குஜராத் மாநிலம் அம்​ரேலி மாவட்​டத்​தில் உள்ள ஜிரா கிராமத்​தில் உள்ள 290 விவ​சா​யிகளின் போலி கடன்​களை அடைக்க ரூ.90 லட்​சத்தை சூரத்தை சேர்ந்த ஒரு தொழில​திபர் கொடுத்து உதவி​யுள்​ளார்.

மனிதநே​யம் மற்​றும் தாராளமனப்​பான்​மைக்கு தனது தாயாரின் நினை​வு​நாளில் சூரத் தொழில​திபர் செய்த இந்த சம்​பவம் ஒரு முன்​மா​திரி​யாக மாறி​யுள்​ளது. அம்​ரேலி மாவட்​டம் ஜிரா கிராமத்​தில் உள்​ளூர் கூட்​டுறவு சங்​கத்​தில் அதன் நிர்​வாகி​கள் கிராமத்​தில் உள்ள படிக்​காத ஏழை விவ​சா​யிகளின் பெயரில் கடன்​பெற்று மோசடி செய்​துள்​ளனர்.

இதனால் அந்த 290 விவ​சா​யிகளும் அரசு திட்​டங்​கள், நிதி உதவி மற்​றும் சட்​டப்​பூர்​வ​மாக கடன் பெறும் தகு​தியை இழந்​தனர். இந்த பொய் கடன்​கள் நிதி நம்​பகத்​தன்​மையை அழித்​தது மட்​டுமல்​லாமல் அவர்​களின் வாழ்க்​கை​யையே சூனிய​மாக்கி விட்​டது. இந்த சுமை தலை​முறை சாப​மாக மாறியது. இதனை அறிந்த சூரத்​தைச் சேர்ந்த ஜவுளி வர்த்​தகர் பாபு​பாய் ஜிரா​வாலா விவ​சா​யிகளை அந்த துயரிலிருந்து மீட்க தயா​ரா​னார்.

இதுகுறித்து அவர் கூறுகை​யில், “விவ​சா​யிகள் நேர்​மை​யானவர்​கள். ஆனால், பிறரின் சதி​யால் அவர்​கள் அநீ​தி​யில் சிக்​கிக் கொள்​கின்​றனர். நீ வாழ்க்​கை​யில் உயர்ந்​தால் அவர்​களின் துன்​பத்​தைக் குறைக்க உனது வெற்​றியை பயன்​படுத்த வேண்​டும் என்ற போதனையை எனது தாயார் ஏற்​கெனவே வழங்​கி​யுள்​ளார் அது​தான் இப்​படி என்னை செயல்பட தூண்​டியது’’ என்​றார்.

நிலுவை தொகை இல்​லை: இதையடுத்து தனது மூத்த சகோதரர் கன்​ஷ்​யாம்​பாய் ஜிரா​வாலா​வுடன் சேர்ந்து பாபு​பாய் கூட்​டுறவு வங்​கி​யில் ரூ.89,89,209 டெபாசிட் செய்து பாதிக்​கப்​பட்ட ஒவ்​வொரு விவ​சா​யிக்​கும் என்​ஓசி எனப்​படும் ‘‘நிலுவை தொகை இல்​லை’’ என்ற சான்​றிதழ் கிடைப்​பதை உறுதி செய்​தார்.

ஜிரா கிராமத்​தில் அதற்​கான சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட்ட போது வயதான விவ​சா​யிகள் கண்​ணீர்​விட்டு அழுது தங்​களது கண்ணி​யத்தை மீட்​டெடுத்​ததற்​காக பாபு​பாயை வணங்கி ஆசீர்​வ​தித்​தனர். அப்​போது அவர்​கள் தங்​களது நீண்ட கால கடினமான கனவு முடிவுக்கு வந்​த​தாக தெரி​வித்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.