சீருடை பணியாளர் தேர்வு வாரிய மதிப்பெண் அடிப்படையில் எஸ்.ஐ பதவி உயர்வு: 34 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

சென்னை: ‘சீருடை பணி​யாளர் தேர்வு வாரிய மதிப்​பெண் அடிப்​படை​யில் எஸ்.ஐ பதவி உயர்வு வழங்​கப்​படும்’ என தமிழக அரசு அரசாணை பிறப்​பித்​துள்​ளது.

தமிழக காவல் துறை​யில், காவல் பணி​யிடங்​கள் தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யம், தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மற்​றும் மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் நிரப்​பப்​படு​கின்​றன. நேரடி எஸ்.ஐ. பணிக்​கான தேர்வை 1991 முதல் தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யம் நடத்​துகிறது.

இதன்​மூலம் தேர்ந்​தெடுக்​கப்​படும் எஸ்​.ஐ.க்​களுக்கு (உதவி ஆய்​வாளர்) காவலர் பயிற்சி கல்​லூரி​யில் ஓர் ஆண்டு பயிற்​சிகள் அளிக்​கப்​படு​கி்ன்​றன. இங்கு வழங்​கப்​படும் மதிப்​பெண் அடிப்​படை​யிலேயே பதவி உயர்​வுக்​கான பட்​டியலில் எஸ்​.ஐ-க்​களின் பணி மூப்பு நிர்​ண​யம் செய்​யப்​பட்​டது.ஆனால், காவலர் பயிற்சி கல்​ லூரி​யில் சில நேரங்​களில் பாரபட்​ச​மாக மதிப்​பெண் வழங்​கப்​படு​வ​தாக​வும், எனவே, சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யம் நடத்​திய தேர்வு மதிப்​பெண் அடிப்​படை​யிலேயே சீனி​யாரிட்டி வைக்க வேண்​டும் எனவும் தொடர்ந்து வலி​யுறுத்​தப்​பட்டு வந்​தது. இதுதொடர்பான வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தால் வழங்​கப்​படும் மதிப்​பெண்​களை பதவி உயர்வு பணிமூப்​புக்கு எடுத்​துக்​கொள்ள வேண்​டும் என்று கடந்த மே மாதம் இறு​தி​யில் உத்​தர​விட்​டது.

மேலும், தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூலம் கடந்த 1996 முதல் 2024-ம் ஆண்டு வரை நேரடி​யாகத் தேர்வு செய்​யப்​பட்ட உதவி ஆய்​வாளர்​களின் பதவி உயர்​வுக்​கான பணிமூப்​பை​யும் இவ்​வாறே பின்​பற்ற வேண்​டும் எனவும் உச்ச நீதி​மன்​றம்தீர்ப்​பளித்​துள்​ளது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்​ளு​படி செய்யப்பட்டது.

உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தர​வைப் பின்​பற்​றி, தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தின் மூலம் வழங்​கப்​படும்மதிப்​பெண்​களை மட்​டுமே எஸ்.ஐ பதவி உயர்​வுக்​கான பணிமூப்​புக்​குப் பயன்படுத்த வேண்​டும் என தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. இதன்​மூலம் தமிழக காவல் துறை​யில் 34 ஆண்​டு​களாக நீடித்து வந்த பிரச்​சினைக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, இனிவரும் காலங்​களில் பதவி உயர்​வில் எந்த குழப்​ப​மும் இருக்​காது என போலீ​ஸார் நம்​பிக்கை தெரிவித்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.