நவ. 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது.

இதுதொடர்​பாக வெளி​யிடப்பட்ட செய்​திக்​குறிப்பு: வட தமிழகம் அதையொட் டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சி நில​வு​கிறது. இதனால் இன்று முதல் வரும்13-ம் தேதி வரை சில இடங்​களி​லும், வரும் 14, 15-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.வரும் 12, 13-ல் தஞ்சை,புதுக்கோட்​டை, ராம​நாத​புரம்,விருதுநகர், தூத்​துக்குடி,திருநெல்வேலி,கன்​னி​யாகுமரி, நீல​கிரி, கோவை, திருப்​பூர், தேனி, தென்​காசி, திண்டுக்கல் மாவட்​டங்​களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.