டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்பட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், பயங்கரவாதிகள், ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அல்-ஃபலா பல்கலைக்கழகம் உள்பட 25க்கும் மேற்பட்டஇடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில், டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாக ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. […]