CSK குறிவைக்கும் 19 வயது வீரர்… தோனி போல் அதிரடி பினிஷர் – யார் இந்த கார்த்திக் சர்மா?

Chennai Super Kings: ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் (IPL 2026 Mini Auction) வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அனைத்து அணிகளும் கடந்த நவ. 15ஆம் தேதி அனைத்து அணிகளும் தங்களின் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன.

Add Zee News as a Preferred Source

IPL Mini Auction:  கேம்ரூன் கிரீன் vs ஆன்ட்ரே ரஸ்ஸல் 

அந்த வகையில், பல்வேறு முக்கிய வீரர்கள் ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெங்கடேஷ் ஐயர், ஆன்ட்ரே ரஸ்ஸல்; சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மதீஷா பதிரானா; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரவி பிஷ்னோய், டேவிட் மில்லர், ஆகாஷ் தீப்; பஞ்சாப் கிங்ஸ் மேக்ஸ்வெல், ஜாஷ் இங்கிலிஸ் என முக்கிய வீரர்களை அணிகள் கழட்டிவிட்டுள்ளன. கேம்ரூன் கிரீன் கடந்த மெகா ஏலத்தில் காயம் காரணமாக பங்கேற்காத நிலையில், இந்த மினி ஏலத்தில் நேரடியாக வர இருக்கிறார். இவர் பெரும் தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என கூறப்படுகிறது. 

இந்தச் சூழலில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை மினி ஏலத்தில் கொக்கிப்போட்டு தூக்க கடுமையான முயற்சிக்கும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் (ரூ.64.3 கோடி), சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (ரூ.43.4 கோடி) அதிக தொகையுடனும், அதிக தேவையுடனும் மினி ஏலத்திற்கு வருகின்றன. எனவே, பல வீரர்களுக்கு இந்த இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும். குறிப்பாக, கேம்ரூன் கிரீன், ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆகியோருக்கு அதிக தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.

Chennai Super Kings: சிஎஸ்கேவின் முக்கிய தேவை – இந்திய பினிஷர்

இருப்பினும், சிஎஸ்கேவின் தேவையை பொருத்தவரை மிடில்-ஆர்டரில் வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் எந்தளவிற்கு தேவையோ, அதேநேரத்தில் ஒரு இந்திய பினிஷரும் தேவை எனலாம். ஜடேஜா தற்போது சிஎஸ்கேவில் இல்லை என்பதால் அந்த இடத்தில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அபினவ் மனோகர், மஹிபால் லோம்ரோர் ஆகியோருக்கு சிஎஸ்கே நிச்சயம் குறிவைக்கும். அதேநேரத்தில், இளம் திறமையாளர் சிலரையும் சிஎஸ்கே கவனித்திருக்கும். அந்த வகையில், சிஎஸ்கே மட்டுமின்றி பல அணிகள் டார்கெட் செய்யும் வீரராக 19 வயதான கார்த்திக் சர்மா இருக்கிறார். அவர் குறித்து இங்கு காணலாம்.

Chennai Super Kings: யார் இந்த கார்த்திக் சர்மா?

ராஜஸ்தானைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டரான கார்த்திக் சர்மா, 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர்களிலும், ராஜஸ்தான் பிரீமியர் லீக் தொடரிலும் பெரும் கவனம் ஈர்த்தார். சீனியர் பந்துவீச்சாளர்களையே இவர் நிலைகுலையச் செய்தார் எனலாம். இதனால் இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய உத்தேச ஸ்குவாடில் இடம்பெற்றார். ஆனால், இறுதிக்கட்ட ஸ்குவாடில் இடம் கிடைக்கவில்லை. 

தொடர்ந்து, 2024-25 சீசனை பொருத்தவரை வினோ மான்கட் கோப்பை தொடரில் 22 சிக்ஸர்கள் உள்பட 500 ரன்களை குவித்தார். அந்த தொடரில் அதிக ரன்களை குவித்தவர்களில் ஒருவர் என்ற பெருமையை பெற்றார். கூச் பெஹார் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே 104 பந்துகளில் 17 சிக்ஸர்கள் உள்பட 181 ரன்களை குவித்து ஆச்சர்யத்திற்குள்ளாக்கினார்.

Chennai Super Kings: விஜய் ஹசாரேவில் பொறுப்பான ஆட்டம்

இவரின் இத்தகைய ஆட்டங்கள், இவருக்கு வளர்ந்து வரும் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெயரை பெற்றுக்கொடுத்தது. பெரிய பெரிய சிக்ஸர்களை பறக்கவிடும் சக்தியை பெற்றுள்ள இவர், ஆட்டச்சூழலுக்கு ஏற்ப விளையாடும் முதிர்ச்சியை இளம் வயதிலேயே பெற்றிருக்கிறார். அச்சமற்ற இவரது அணுகுமுறையும் இவருக்கு அசுர வளர்ச்சியை கொடுத்துள்ளது எனலாம். 

அதன் பெயரிலேயே, நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. விஜய் ஹசாரே கோப்பை தொடர் மற்றும் ரஞ்சி கோப்பை தொடர் இரண்டிலும் இவர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே சதம் அடித்த பெருமைக் கொண்டவர். விஜய் ஹசாரே கோப்பை தொடரின் முதல் இன்னிங்ஸில் அவர் காட்டிய அதிரடி என்றுமே மறக்க முடியாது. 

அப்போது அவருக்கு வயது 18 தான், மகாராஷ்டிராவுக்கு எதிரான அந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர்கள் யாருமே 20 ரன்களை தாண்டவில்லை. ஆனால், மறுமுனையில் மனோதிடத்துடன் விளையாடிய கார்த்திக் சர்மா 90 பந்துகளில் 123 ரன்களை குவித்து மிரட்டினார். அந்த இன்னிங்ஸ் அவர் உள்ளூர் கிரிக்கெட்டை பின்தொடர்பவர்களை பெரிதும் கவனிக்க வைத்தது. கடந்தாண்டே ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் பல அணிகள் இவரை சோதித்து பார்த்தன. ஆனால், 19 வயதுக்குட்பட்டவர் என்பதால் இவர் மீது யாரும் துணிச்சலாக பணம் போடவில்லை.

Chennai Super Kings: சிஎஸ்கே ஸ்குவாடுடனான அனுபவம் 

ஆனால், கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய ஸ்குவாடுடன் இவரை பயணிக்க வைத்தது. அதன் பிரதான ஸ்குவாடன் பல முறை மோதியதில் கார்த்திக் சர்மா இன்னும் பல உயரங்களை தொட சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்டுள்ளார். சிஎஸ்கேவின் பட்டறையில் கூர்த்தீட்டப்பட்டிருக்கிறார், கார்த்திக் சர்மா. தற்போது கார்த்திக் சர்மா ரஞ்சி கோப்பையில் மிடில் ஆர்டர் பேட்டராக ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பையில் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சதம் அடித்து மேலும் மிரட்டியிருக்கிறார்.

Chennai Super Kings: உற்றுநோக்கப்படும் கார்த்திக் சர்மா

சிவப்பு பந்தை காட்டிலும், இவரது அசாத்தியமான பேட் ஸ்விங் வெள்ளைப் பந்தில் பெரும் சிறப்பைக் கூட்டுகிறது. இதனால், மிடில் ஆர்டரில் தேவைப்படும் அந்த இந்திய பினிஷர் ரோலுக்கு சிஎஸ்கே கார்த்திக் சர்மாவை நிச்சயம் குறிவைக்கும். முன்னாள் சிஎஸ்கே வீரரும், இந்திய ஆல்-ரவுண்டருமான ரவிசந்திரன் அஸ்வின் அவரது யூ-ட்யூப் சேனலிலும், இவரை சிஎஸ்கே டார்கெட் செய்யலாம் என தனது கணிப்பை தெரிவித்துள்ளார். சென்னை மட்டுமல்ல இந்திய திறமைகளை தேடும் பல அணிகள் இவருக்கு குறிவைக்கலாம். அதேநேரத்தில், வரும் நவ. 26ஆம் தேதி தொடங்க இருக்கும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் கார்த்திக் சர்மாவின் ஆட்டங்களை பல அணிகள் உற்றுநோக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும் படிக்க | CSK அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் கிடையாது.. பிளானே வேற!

மேலும் படிக்க | KKR செல்லும் மதீஷா பதிரானா? CSK செய்த மிகப்பெரிய தவறு., என்ன ஆச்சு?

மேலும் படிக்க | கேமரூன் கிரீன் வேண்டாம்.. அவருக்கு பதிலா CSK இந்த வீரரை வாங்கினா சூப்பரா இருக்கும்!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.