India vs South Africa ODI: தென்னாப்பிரிக்கா அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளது. டெஸ்ட், ஓடிஐ, டி20ஐ தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வைட்வாஷ் செய்த நிலையில், ஓடிஐ மற்றும் டி20ஐ தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டும்.
Add Zee News as a Preferred Source
India vs South Africa: கில், ஷ்ரேயாஸ் காயம்
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. 2023 ஆசிய கோப்பை தொடரை வென்றது, 2023 ஐசிசி உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்தது, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது என ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஆஸ்திரேலியா ஓடிஐ தொடரில் ரோஹித் சர்மாவிடம் இருந்த கேப்டன்ஸி பொறுப்பு சுப்மான் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. கடைசி போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றது. ரோஹித், விராட் பேட்டிங்கில் சிறப்பான விளையாடியதை தொடர்ந்து அந்த வெற்றி கிடைத்தது. இருப்பினும் தொடரை இழந்தது பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில், காயம் காரணமாக கேப்டன் சுப்மான் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஓடிஐ தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
India vs South Africa: நம்பர் 4 ஸ்பாட் யார்?
தென்னாப்பிரிக்கா ஓடிஐ தொடரில் சுப்மான் கில் கேப்டன்ஸி பொறுப்பு கேஎல் ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, ஓபனிங்கில் ரோஹித் சர்மா உடன் கில்லுக்கு பதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்குவார். எனவே, சுப்மான் கில்லின் இடம் சிறப்பாகவே நிரப்பப்பட்டுவிட்டது. ஆனால், ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கும் நம்பர் 4 ஸ்பாட்டில் விளையாடப்போவது யார் என்ற கேள்விதான் தற்போது அனைவரிடத்திலும் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த நம்பர் 4 இடத்திற்கு மூன்று வீரர்கள் கடுமையாக போட்டியிடுகின்றனர் எனலாம். அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
India vs South Africa: திலக் வர்மா
இடது கை பேட்டரான திலக் வர்மா 4 ஓடிஐ போட்டிகளில் விளையாடி, 68 ரன்களை அடித்துள்ளார். 2023இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது போட்டியில் 52 ரன்களை அடித்திருந்தார், அதுதான் அவரின் அதிகபட்ச ரன்களாகும். நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 3 போட்டிகளில் இந்திய ஏ அணியில் அவர் 79 ரன்களை அடித்திருந்தார். இந்திய ஏ அணி சார்பாக அதிக ரன்களை அடித்த 2வது வீரர் திலக் வர்மாதான்.
இது ஒருபுறம் இருக்க, இந்திய ஓடிஐ அணியில் டாப் ஆர்டரில் இடது கை வீரரே இல்லை என கூறப்பட்டது. ரோஹித், கில், விராட், ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் என டாப் ஆர்டரில் 5 பேரும் வலது கை பேட்டராக இருந்தார்கள். எனவே, இடதுகை வீரர் டாப் ஆர்டரில் தேவைப்பட்டது. அதற்காக வலுகட்டாயமாக சாம்பின்ஸ் டிராபி, ஆஸ்திரேலிய தொடரில் அக்சர் பட்டேல் நம்பர் 5இல் இறக்கப்பட்டார். இப்போது ஜெய்ஸ்வால் வந்துவிடுவார் என்பதால் மிடில் ஆர்டரில் இடது கை வீரர் கண்டிப்பாக வேண்டும் என்ற நிலை இல்லை. ஆனால் தேவையென்றால் எடுக்கலாம். நீண்ட நேரம் நின்று விளையாடக்கூடிய வீரர் திலக் வர்மா என்பதை பல முறை பார்த்திருக்கிறோம். அதை கம்பீர் விரும்பும்பட்சத்தில் திலக் வரமா நம்பர் 4 இடத்தில் கொண்டுவரப்படலாம்.
India vs South Africa: ரிஷப் பண்ட்
ஏற்கெனவே கேப்டனாக கேஎல் ராகுல் இருப்பதால், தனியே விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இடம்பெறும் வாய்ப்பு குறைவு. மேலும் இவர் சமீப காலமாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சோபிக்கவில்லை. டி20ஐ போட்டிகளில் இவர் விளையாடுவதில்லை. ஓடிஐ அணியில் தற்போதுதான் சேர்க்கப்பட்டிருக்கிறார். 31 போட்டிகளில் 871 ரன்களை பண்ட் சர்வதேச ஓடிஐ-ல் அடித்துள்ளார், சராசரி 33.50 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 106.21 ஆக உள்ளது.
இவர் நம்பர் 4இல் இடத்தில் களமிறங்கினால் இடது கை வேரியேஷன் கிடைக்கும். மிடில் ஓவர்களில் (11வது ஓவர் முதல் 40வது ஓவர் வரை) 4 பீல்டர்கள் மட்டுமே 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே நிற்கலாம் என்பதால் ரிஷப் பண்டின் ஆட்டத்திற்கு அது ஏதுவாக இருக்கும். ‘பட்டா பாக்கியம்…’ என்ற அணுகுமுறையில் இந்தியா களமிறங்க நினைத்தால் இவரை களமிறக்கலாம். ஆனால், இவர் சமீபத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடாதது பின்னடைவுதான்.
India vs South Africa: ருதுராஜ் கெய்க்வாட்
சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பை தொடர், இந்தியா ஏ – தென்னாப்பிரிக்கா ஏ தொடரில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார் ருதுராஜ் கெய்க்வாட். தொடர்ச்சியாக உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வந்ததன் பலனாக அவருக்கு இந்திய ஸ்குவாடில் நீண்ட நாள் கழித்து வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் பிளேயிங் லெவன் ஸ்பாட் கஷ்டம்தான். இவர் அனைத்து போட்டிகளிலும் ஓபனராக விளையாடி வந்துள்ளார்.
ஏற்கெனவே, ரோஹித் – ஜெய்ஸ்வால் ஆகியோர் இருப்பதால் ருதுராஜ் ஓபனராக வருவது கஷ்டம். இவர் மிடில் ஆர்டரில் விளையாடுவாரா இல்லையா என்பதும் தெரியாது. அதிகபட்சம் நம்பர் 3 இடத்திலேயே ருதுராஜ் விளையாடியிருக்கிறார். இவர் மிடில் ஆர்டரில் நிலைத்துநின்று ஆட்டத்தை 45வது ஓவர் வரை எடுத்துக்கொண்டு செல்வாரா என்பதும் தெரியாது. ஆனால், உள்நாட்டு தொடர்களில் இவர் அடித்த ரன்களுக்கு மதிப்பளுக்கும் வகையில், அவரை பிளேயிங் லெவனிலும் எடுக்கலாம்.
மேலும் படிக்க | வாய் விட்டு வம்பை விலைக்கு வாங்கிய கம்பீர்.. கடுப்பான பிசிசிஐ.. இந்த தொடர்தான் கடைசி வாய்ப்பு?
மேலும் படிக்க | 36 வயது வீரருக்கு மினி ஏலத்தில் ‘செம மவுஸ்’ – CSK உள்பட 3 அணிகள் நிச்சயம் சுத்துப்போடும்!
மேலும் படிக்க | சஞ்சு சாம்சன் இல்லாமலே பலமாக இருக்கும் RR… மினி ஏலத்தில் யார் யாரை குறிவைக்கும்?
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More