கிடைத்த சர்ந்தர்ப்பத்தில் எல்லாம் சீனா இந்தியாவை சீண்டி வருவதாகவும், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில் இந்தியாவின் ராணுவ பலத்தை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த ராஜாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை அவ்வப்போது சீண்டிவிடுவதை போல சீனா, இந்தியாவையும் சீண்டிவிடுவதாக தெற்கு மற்றும் மத்திய இந்திய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் டோனால்டு லூ தெரிவித்துள்ளார்.
சீனாவின் தொடர் சீண்டுதலை சமாளிக்க கடல் பாதுகாப்பு, உளவு துறை, தகவல் பரிமாற்றம், விண்வெளி மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக டோனால்டு லூ தெரிவித்தார்.