சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று.!

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 7 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கிண்டி ஐஐடி வளாகத்தில் 3 மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மூன்று பேரும் தனிமைபடுத்தப்பட்டனர். இதனையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் மாணவர்கள் உட்பட 18 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது.

இதில், 7 பேருக்கு லேசான அறிகுறியுடன் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்த அனைவரும் தனிமைபடுத்தப்பட்டனர்.

இதனையடுத்து, ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பரிசோதனையை அதிகரிக்கவும், வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.