மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு.. முடங்கிய மக்கள்..!

சீனாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்படுவதால், 10 சதவீத பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவினாலே கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு விடும்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில்: இந்தியாவை நிரந்தரமாக்க பிரான்ஸ் ஆதரவு!

இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதன் காரணமாக இந்த மாகாணத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில், பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

பொது மக்கள் இந்த வாரம் வரை வீடுகளை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரிசோதனைக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றை மூடும்படி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பெய்ஜிங்கில் கடந்த 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.