ஆர்.எஸ். பாரதி பிச்சை எடுக்க தட்டு… வரம்பு மீறும் பாஜகவினர்.. டென்ஷனில் திமுக

5 தட்டுகளையும் அத்துடன் நாணயங்களையும் போட்டு ஆர்.எஸ்.பாரதி வீட்டு முகவரிக்கு தபால் அனுப்பி வைத்த பாஜகவினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் பாளையங்கோட்டையில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொதுகூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘கவர்னருக்கு சம்பளம் கொடுப்பது நாம். அவர் டீ குடிப்பது முதல் அவர் வீட்டு வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பது வரை தமிழக அரசின் வரிப்பணம் தான் கொடுக்கப்படுகிறது, ஆனால், நம்முடைய வரிப்பணத்தில் அமர்ந்திருக்கும் அவர், திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார் என்றார்.

மேலும், ஆர்.என். ரவி திராவிடம் என்பதே இல்லை என சொல்கிறார். ஐ.பி.எஸ். படித்துவிட்டு அரசியலுக்கு வருகிறவர்கள் எல்லாம் மெண்ட்டலாகத்தான் இருங்காங்க என ஆளுநர் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையையும் என கடுமையாக விமர்சித்திருந்தார். ஆர்.எஸ்.பாரதியின் இத்தகைய பேச்சுக்கு பாஜக-வினரிடையே கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இந்தநிலையில் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, ஆர்.எஸ் பாரதிக்கு இருக்கக்கூடிய தகுதி அறிவாய வாசலில் உட்கார்ந்து கொண்டு பிச்சை எடுப்பது தான்.

அங்கு உட்கார்ந்து கொண்டு கோபாலபுர குடும்பதினரிடம் பிச்சை வாங்குவதற்காக ஆர்.எஸ்.பாரதியை போன்ற மூன்று அல்லது நான்கு பேருக்கு உட்கார்ந்துகொண்டு பிச்சை எடுப்பது காலம் காலமாக வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என கடுமையாக சாடியிருந்தார். இதற்கு ஆர் எஸ் பாரதி தரப்பில் ஆம் பிச்சை தான் வாங்குகிறேன் என பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆன்மீக பிரிவு அணி தலைவர் அதிசயம் குமார் ஏற்பாட்டில் ஆர்.எஸ்.பாரதிக்கு பிச்சை எடுக்க தட்டுகளை அனுப்ப திட்டமிடபட்டு மாவட்ட தலைமை தபால் அலுவலகத்திற்கு 5அலுமினிய தட்டுகளுடன் வந்தனர். அப்போது, ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அறிவாலய பிச்சைக்காரர் ஆர்.எஸ்.பாரதிக்கு தட்டினை அன்பளிப்பதாக முழக்கமிட்டபடி அந்த தட்டில் நாணயங்களையும் இணைத்து அனுப்பிவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.