தேசிய திரைப்பட கழகத்துக்காக படம் தயாரிக்கிறார் லிங்குசாமி

இயக்குனர் லிங்குசாமி கடைசியாக ராம் பொத்தனேனி நடிப்பில் தி வாரியர் படத்தை இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. இந்த நிலையில் என்எப்டிசி எனப்படும் தேசிய திரைப்பட கழகத்திற்கு 2 படங்களை தயாரித்து கொடுக்கிறார்.

இதில் ஒரு படத்தை ரேணிகுண்டா, வயது 18 படங்களை இயக்கிய பன்னீர் செல்வமும், ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, அழகன் அழகி, ஆனந்தம் விளையாடும் வீடு படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இன்னொரு படத்தையும் இயக்குகிறார்கள்.

“என்.எப்.டி.சிக்கு 2 படங்களை இயக்குகிறோம். நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இதன் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது. நான் இயக்கும் படத்துக்கான கதை விவாதமும் நடந்து வருகிறது” என்கிறார் லிங்குசாமி.

ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் 5 படங்களைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனங்களுடன் இன்னோவேட்டிவ் பிலிம் அகாடமி என்ற அமைப்பும் இணைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.